Friday, June 17, 2016

பங்குசந்தை ஒரு அறிமுகம்

பங்குசந்தை ஒரு அறிமுகம்

பங்குசந்தையை பற்றி ஆரம்பிக்கும் முன் பிற முதலீட்டு வாய்ப்புகளையும் சிறிது பார்ப்போம்.

அரசாங்க கடன் பத்திரங்கள்
நிலம்
தங்கம்
Mutual Fund
பங்குசந்தை

அரசாங்க கடன் பத்திரங்கள்
குறிபிட்ட காலக் கெடுவிற்குள் முதிர்வடையும் வகையில் வெளியிடப்படும் பத்திரம். இதற்கான வட்டி விகிதம் நிலையானது. முதலிட்டிற்கான உத்திரவாதம் உண்டு.

நிலம்

முதலீடு செய்யும் போது சிறிது கவனமாக இருந்தால் போதுமானது. Fencing போன்ற பராமரிப்பு செலவுகள் உண்டு. ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் விற்று பணமாக்குவது கடினம்.

தங்கம்
பெண்கள் மிகவும் விரும்பும் முதலீடு. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஏறிவந்தாலும் இதற்கான Demand குறையவில்லை. இதை வாங்குவதைவிட தற்போதைய காலக்கட்டத்தில் இதை பாதுகாப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.

Mutual Fund
எவ்வாறு முதலீடு செய்வது என்றே தெரியாதவர்களுக்கு இவை ஒரு வரபிரசாதம். இவற்றின் மதிப்பை NAV என்று குறிபிடுகிறார்கள். இவற்றில் நிலையான வருமானம் தரக்கூடியவை மற்றும் பங்குசந்தை தொடர்பான முதலீட்டு வாய்ப்புகளும் உள்ளன.

பங்குசந்தை
Last but not least என்பது போல தற்பொழுது பங்குசந்தையை பற்றி பார்ப்போம்.
பங்குசந்தை என்பது பங்குகள் வர்த்தகம் ஆகும் இடம்.
இதில் Primary Market, Secondary Market என்று உள்ளன.

Primary Marketஐ IPO என்றும் அழைப்பர். பொதுவாக கம்பெனிகள் தங்களது கம்பெனிகளின் விரிவாக்கத்திற்காக பணம் தேவைப்படும் பொழுது தங்களிடம் உள்ள பங்குகளில் ஒரு குறிபிட்ட சதவிதத்தை பொதுமக்களிடம் வெளியிட்டு பணம் திரட்டுவார்கள்.

Secondary Market என்பது IPOவில் வெளியிடப்படும் பங்குகள் அதற்கப்புறம் வியாபாரம் ஆகும் இடம் ஆகும்.
இதற்கான சந்தைகள் தற்பொழுது இரண்டு இயங்கி வருகின்றன. முன்பு பல சந்தைகள் இயங்கி வந்தன. ஆனால் தற்பொழுது கீழ்கண்ட சந்தைகள் மட்டும் பிரபலமாக இயங்கி வருகின்றன. அவை

i - BSE - Bombay Stock Exchange
ii - NSE - National Stock Exchange


இவைகளில் எதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் தொடரும்...

No comments:

Post a Comment